Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 9

நாள் ஒன்பது - பாடல் - ஒன்பது

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய்.

பழயவைகளிலெல்லாம் பழமையானவனே! புதியவைகளிலெல்லாம் புதுய இயல்போடு இருப்பவனே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உனது சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகிறோம். உனக்கு ஆட்பட்டவர்களின் திருவடிகளை வணங்குவோம். அவ்விடத்து அவர்களை அனுசரித்து ஒழுகுவோம். அத்தகையோரே எங்களுக்குக் கணவன்மார் ஆகுக. அவர்கள் விரும்பிச் சொன்னவண்ணமே தொண்டராய்ப் பணிபுரிவோம். இவ்வாறு, எங்கள் இறைவா! எங்களுக்கு அருள் புரிவாயேல் எங்களுக்குக் குறை ஒன்றுமிராது. பெண்ணே! வாழ்விற்குரிய இப்பாங்கை நீ ஏற்றுக்கொள். நாங்கள் கூறியவற்றை எண்ணிப்பார்.

அடியார்க்கும் அடியார்களைப் பணிவது ஆண்டவனைப் பணிவதாகும். அந்தப் பணியே அனைத்திலும் சிறந்த இனிய பணியாகும்! இதில் நவசக்திகள் சிவன் பெருமை பேசுகிறார்கள். ஒரு மூன்றாம் பிழம்பாகிய அருவம், அரு உருவம், உருவம் என்னும் மூன்றனுள் அருவ நிலை குறிப்பது இது.

0 Comments: