ஐயகோ!!
இது என்ன கொடுமை?
நாட்டில்தான் கட்டாய மதமாற்றம் என்றால் BLOGGERம் அதில் இறங்கிவிட்டதே!
நான் என் பாட்டுக்கு இருந்த வலைப்பூவில் என்னுடைய இடுகைகளை இட்டுவந்தது Bloggerக்குப் பிடிக்காமல், அதுவே என் வலைப்பூவை மாற்றித்தருகிறேன் என்று சொல்லி மாற்றிவிட்டது. அதையும் ஒழுங்காகச் செய்யாமல் நன்றாய் தெரிந்துகொண்டிருந்த தமிழ் எழுத்துக்களை திஸ்கி மாதிரி் ஆக்கிவிட்டது.
ஐயா, தொழில் வல்லுனர்களே! என்ன செய்தால் என் வலைப்பூவில் யூனிகோடு எழுத்து தெரியும்? செவிக்கினிய பாடல்கள் வலைப்பூவைப் பார்த்து நல்வழிப்படுத்துங்களேன்.
Wednesday, January 31, 2007
கட்டாய மாற்றம்
Posted by ஞானவெட்டியான் at 8:48 PM 2 comments
Labels: ஞானவெட்டியான்
Tuesday, January 30, 2007
திரையிசை கேட்க CINPOD
அன்புடையீர்,
ஏதோ! "PODCASTING" அப்படியெனச் சொல்லுகிறார்களே? அது என்ன? என என்னுள்ளே எழுந்த கேள்விகளுக்காகக் கூகுள் ஆண்டவரை அழைத்தேன். உள்ளே நுழைந்து தேடும்போது கிட்டியவைகளை அசைபோட்டபோது, "நாமும் ஏன் ஒன்று உருவாக்கக் கூடாது?" என்னும் வினா என்னுள்ளே எழுந்தது. அதன் விளைவே இந்த "CINPOD".
வழக்கிழந்த காவியங்களை உயிர்ப்பிக்கும் என் கொள்கைக்கு இதைப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். 1940 முதல் 1980 வரை முத்துமுத்தான திரையிசைப் பாடல்கள் வந்துள்ளன. எழுதியவர்களுள் என் உள்ளங்கவர்ந்தவர்கள் இருவர்; ஒருவர் பட்டுக்கோட்டையார்; இன்னுமொருவர் கவிஞர் கண்ணதாசன். இவ்விருவருமன்றி, உடுமலை நாராயணகவி, மருதகாசி ஆகியோரின் காலத்தால் அழியா காவியங்களுக்கு இன்னிசை அமைத்தவர்கள், G.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள், R.சுதர்சனம், A.M.ராஜா, T.R.பாப்பா, T.G.லிங்கப்பா, இன்னும் பலர்.
இவ்வினிய பாடல்களை, "செவிக்கினிய பாடல்கள்" என்னும் வலைப்பூவில் பிட்டுப் பிட்டு இட்டுவந்தாலும், அவைகளை ஒருங்கிணைத்து இங்கே தாரலாம் என்பது என் அவா. எப்பொழுது வேண்டுமானாலும் ஒட்டுமொத்தமாகக் கேட்டு மகிழுங்கள்.
Posted by ஞானவெட்டியான் at 12:12 PM 4 comments
Labels: ஞானவெட்டியான்
Saturday, January 13, 2007
பொங்கலுக்குத் தயாராகிறேன்
ஆண்டுக்கொருமுறை வரும் பொங்கல் ஏன் வருகிறது?
வீட்டில் உள்ள பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்றை சேர்ப்பதற்கும்தான்!
"குடிசை வீட்டில் உள்ள கூரை ஒழுகுகிறது; சூரியன் தாராளமாக உள்ளே வருகிறான் என நானும் சொல்லிக்கிட்டே இருக்கிறேனே! காதில் விழவில்லையா?" என்று குறையிடும் மனைவி.
"கவலைப்படாதே! என் கோமளமே! பொங்கல் வரட்டும்; செய்து விடுவோம்" எனும் கணவன். எப்படிச் செய்வது?
வெள்ளாமை விளைஞ்சு விலைக்குப் போட்டு வரும் பணத்தை என்ன செய்வது?
பயிர் விளைந்து பணம் வந்துவிட்டது; காரணமாயிருக்கும் சூரியனுக்குப் பொங்கல். அதைச் சாக்காக வைத்து குடிசையை சீர்திருத்தியாகிவிட்டது. உடைந்த மண்திண்ணைக்கு ஒட்டு; சாணம் மஞ்சள் கரைத்து மெழுகி சீர்பார்த்தாகிவிட்டது. வெள்ளை அடித்துவிட்டாகிவிட்டது. பெண்னுக்கு வரன் பார்த்தாகிவிட்டது; பொங்கல் முடிந்த கையோடு திருமணம் நிச்சயித்தாயிற்று.
மனைவியின் மஞ்சள் முகத்தில் ஒளிவீசுகிறது; அவ்வளவு பூரிப்பு.
இவ்வளவு காரியம் பார்த்தாகிவிட்டது.
அதனால், நாளைக்கு நண்பர்கள், சுற்றத்தார் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்வதை ஒத்தி வைத்துவிட்டு ஓய்வெடுப்பது நல்லதல்லவா?
Posted by ஞானவெட்டியான் at 8:30 PM 12 comments
Labels: ஞானவெட்டியான்
Friday, January 12, 2007
சற்றே உதவுவீர்களா?
அன்புடையீர்,
Sandboxஅடைப்பலகையிம் தலைப்பிலும், comments2லும் கீழ்க்கண்டவாறு தெரிகிறது. அவை ஒழுங்காகத் தெரிய அடைப்பலகையில் என்ன மாற்றம் செய்யவேண்டும்.
சற்றே உதவுவீர்களா?
Posted by ஞானவெட்டியான் at 7:52 AM 16 comments
Labels: ஞானவெட்டியான்
Monday, January 01, 2007
சாதி எப்படி வந்தது?
சாதி எப்படி வந்தது?
அளவற்ற் செல்வமிருந்தால் அதை ஏழைக்கு கொடுப்பதா?
யோகியின் நிலை என்ன?
பட்டினத்தார் சொல்வதென்ன?
Posted by ஞானவெட்டியான் at 10:46 AM 0 comments
Labels: ஞானம், ஞானவெட்டியான்
கடவுள் யார்?
கடவுள் யார்?
அவனை எப்படி உணர்வது?
சிற்றின்பம் என்றால் என்ன?
பேரின்பம் என்றால் என்ன?
பட்டினத்தாரின் பதில் என்ன?
Posted by ஞானவெட்டியான் at 10:24 AM 0 comments
Labels: ஞானம், ஞானவெட்டியான்






