2.43 ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம்
மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல்
தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப்
போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன்.
ஊன்று - உறுதியாகத் தாங்கப்பெற்ற.
வயிராகம் - வைராக்கியம், உறுதி.
முறுவல் - புன்னகை.
புனிதன் - தூயோன்.
ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் பிருங்கி முனிவன். அ·து அரனுக்கு முறுவலை விளைத்ததாம்.
Sunday, November 22, 2009
பிருங்கி முனிவர் மகிழல்
Posted by ஞானவெட்டியான் at 5:17 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment