பழமொழி நானூறு - 7
************************
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
உரை - சொல், வழக்கு
வழக்கின் முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், சிறு வயதினன், என்று இகழ்ந்த நரைமுடி உள்ள இருவர் மகிழும்படி நரைமயிரை முடியில் முடித்து, அவர்கள் கூறிய சொற்களாலேயே நீதி வழங்கினான் கரிகால் பெருவளத்தான். ஆகவே, தத்தம் குலத்திற்குரிய அறிவு நூல்களைக் கல்லாமலே அமையும்.
பழமொழி
**********
"குலவித்தை கல்லாமலே உளவாம்."
Monday, February 16, 2009
பழமொழி நானூறு - 7
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment