வீரபுத்திரர் வருதல்
***********************
2.40 செருக்கொ டுஞ்சிவ நிந்தைசெய் வாய்க்கிலை தீர்வு
விரிக்கி னென் றுமுன் சிறுவிதி தலையற வெட்டி
எரிக்கு நல்கிநிந் தனைசெயா மறிமுகம் இயைத்துத்
தருக்கி நின்றவவ் வீரன்வந் தொருபுடை சார்ந்தான்.
செருக்கொடும் - ஆணவத்தோடும்.
தீர்வு இலை - கழுவாய் இல்லை.
சிறுவிதி - தக்கன்.
மறிமுகம் - ஆட்டுமுகத்தை.
இயைத்து - பொருத்தி.
தருக்கிநின்ற - மகிழ்ந்து நின்ற.
ஒரு புடை - ஒரு பக்கம்.
இறைவனை இகழ்ந்தமைக்கும் மேலும் இகழாமல் இருக்கும் பொருட்டும் தக்கன் தலையை வெட்டி ஆட்டு முகத்தை அமைத்த வீரபுத்திரர் வந்து இறைவனின் ஒரு பக்கம் நின்றான்.
Monday, February 16, 2009
பிரபுலிங்க லீலை - 2.40
Posted by ஞானவெட்டியான் at 4:41 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment