Tuesday, February 17, 2009

பழமொழி நானூறு - 8

பழமொழி நானூறு - 8
******************************

8.புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்.

நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பின் கால் பாம்பு இனம்
மட்டும் அறியும் தன்மையன. அதுபோல், அறிவிற் சிறந்தவர்களை அறிவினால்
அறிந்துகொள்ளும் திறம் அவர்களைப் போன்ற அரிவிற் சிறந்தோர்க்கே விளங்கும்.
கல்வி அறிவற்ற பொது மக்கட்க்கு ஆகாது.

பழமொழி
********

"பாம்பின் கால் பாம்பறியும்."

0 Comments: