223.ஐங்காயம் அரைத்துக் கரைத்தாலும் நாத்தம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
224.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
225.ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
226.ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?
227.ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
228.ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும்.
229.ஒரு காசு சேத்தா இரு காசு தேறும்
230.ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
231.ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
232.ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
233.ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
234.ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
235.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
236.ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே ஓடு.
237.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
238.ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
239.ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
240.ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
241.ஒளியத் தெரியாம தலையாரி வீட்டில் ஒளிந்தது போல
242.ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
243.ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
244.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
245.ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
246.ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
247.ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
Saturday, February 07, 2009
பழமொழி 600
Posted by ஞானவெட்டியான் at 5:52 PM
Labels: பழமொழி 600
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment