Saturday, February 07, 2009

பழமொழி 600

320.காகம் திட்டி மாடு சாகாது.
321.காக்கா கர் என்றால் (நடிக்கும் மனைவி)கணவனை இறுகக் கட்டிக்கொள்வாளாம்
322.காக்காய்க்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு
323.காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்.
324.காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
325.காடிச் சோத்துக்குக் கரணம் போடுறா
326.காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
327.காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்னைக் கொடுப்பதுபோல்
328. காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?
329.காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
330.காணாமல் கண்ட கம்பங்கூழை சிந்தாமல் குடி
331.காணி ஆசை கோடி கேடு.
332.காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
333.காயும் கனியும் உண்டானால் கார்த்திகையில் திருமணம்
334.காய் சுமையைக் கொடி தாங்காதா?
335.காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
336.காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
337.காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
338.காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
339.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
340.காற்றில்லாமல் தூசி பறக்குமா?
341.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
342.காலம் அறிந்து பிழைக்காதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்
343.காலம் செய்வதை ஞாலம் செய்யாது.
344.காலம் போகும் வார்த்தை நிற்கும்; கப்பல் போகும் துறை சேரும்.
345.காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
346.கால் வயிற்றுக் கஞ்சியானாலும் கடன் இல்லா கஞ்சி.
347.காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
348.காஞ்சவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
349.காடுவெட்டிக்கு கம்பு பிடுங்கப் பயமா?
350.கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்வமா?
351.கிணற்றுத் தவளைக்கு நாட்டு நடப்பு தெரியுமா?
352.கிழவனுக்கு வாக்கப்படுறதைவிடக் கேணியில் விழுவது மேல்.
353.கீர்த்தியால் பசி தீருமா?
354.கீறி ஆற்றினால் புண் ஆறும்.
355.குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
356.குசவனுக்கு ஆறுமாதம்; தடிக்காரனுக்கு அரை நாழிகை.
357.குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
358.குடிஇருந்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
359.குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
360.குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
361.குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும்.
362.குணத்தை மாற்றக் குருவில்லை.
363.குணம் இல்லா வித்தை எல்லாம் பாழ்.
364.குலத்தைவிடக் குணமே பெரிது.
365.குளத்திடம் கோவித்துக் குண்டி கழுவாம இருந்தால் எப்படி?
366.குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
367.குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
368.குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
369.குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
370.குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
371.குப்பை உயரும் கோபுரம் தாழும்.
372.குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
373.குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல்
374.குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
375.குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
376.குரு மொழி கேளாதவனும் தாய் சொல்லுக்கு அடங்காதவனும் சண்டி.
377.குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
378.குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
379.குரைக்கிற நாய் கடிக்காது.
380.குறுணிக்காரனுக்கு வாக்கப்பட்டு பதக்கு, பதக்கு என்றால் எப்படி?
381.குறைகுடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது.
382.குறும்பியுள்ள காதும் குற்றமுள்ள நெஞ்சும் குறுகுறு என்குமாம்
383.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
384.குல வழக்கும் இட வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
385.குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பே
386.குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
387.குளிராத வீடும் கூத்தியும் இருந்தா, மயிரான வெள்ளாமை விளைஞ்சா என்ன? விளையாட்டி என்ன?
388.குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
389.கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவானா
390.கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
391.கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
392.குடுத்தாலும் கல்வி குறையாது
393.கெடுமதி கண்ணுக்குத் தெரியாது
394.கெடுவான் கேடு நினைப்பான்
395.கெட்டாலும் செட்டியே; கிழிந்தாலும் பட்டு பட்டுதான்.
396.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
397.கெட்டும் பட்டணம் சேர்
398.கெண்டையைப் போட்டு வராலை இழு.
399.கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
400.கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
401.கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
402.கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பினது எல்லாத்தையும் சொல்லாதே?
403.கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்
404.கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
405.கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறாது
406.கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
407.கையில் பொருள் இல்லையென்றால் கட்டினவளும் பாராள்
408.கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
409.கையிலே காசு வாயிலே தோசை
410.கையில் பொருள் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
411.கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்
412.கையில் பொருளில்லை என்றால் கட்டுக் கழுத்தியும் திரும்பிப் பாராள்.
413.கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
414.கொடிக்கு காய் கனமா?
415.கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
416.கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
417.கொடுத்தைக் கேட்டால் வந்திடும் பகை.
418.கொடும்பாவியானாலும் கொண்ட மாமியார் வேண்டும்
419.கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
420. கொண்டவன் அடிக்கக் கொழுந்தன் மேல் விழுந்தாளாம்
421.கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
422.கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
423.கொல்லன் தெருவில் ஊசி விலைபோகாது.
424.கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
425.கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
426.கோள் சொல்பவன் கொடுந்தேள்.
427.கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
428.கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
429.கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
430.கோபம் சண்டாளம்.
431.கோபுரத்து பூதம்போல
432.கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
433.கோயில் சோத்துக்கு குமட்டிண தேவடியா
434.கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
435.கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

0 Comments: