175.எங்கே வெளைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா?
176.எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
177.எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
178.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
179.எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும், பெண் புத்தி பின் புத்தியே(will have an afterthought)
180.எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
181.எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
182.எண்ணை கண்ட இடத்தில் தடவிக்கொண்டு சீப்புகண்ட இடத்தில் சீவிக்கொள்வது போல
183.எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
184.எதார்த்தவாதி வெகுசன விரோதி.
185.எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
186.எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
187.எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
188.எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலாட்டுவது
189.எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
190.எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
191.எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
192.எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
193.எருமை மூத்திரம் எக்கியத்துக்கு ஆகுமா?
194.எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
195.எறும்பு ஊர கல்லுந் தேயும்.
196.எறும்புந் தன் கையால் எண் சாண்
197.எலி அழுதால் பூனை விடுமா?
198.எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
199.எலி வளை யானாலும் தனி வளை வேண்டும்.
200.எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
201.எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
202.எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து; பாவியென் தலையில பத்தெழுத்து.
203.எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
204.எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
205.எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
206.எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
207.எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
208.எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
209.எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
210.எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
211.எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
212.எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
213.எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
214.ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
215.ஏன் என்பாரும் இல்லை; எடுத்துப் பாப்பாரும் இல்லை
216.ஏரி நிறைந்தால் கரை கசியும்.
217.ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
218.ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
219.ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
220.ஏழை என்றால் எவர்க்கும் எளிது
221.ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
222.ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
Saturday, February 07, 2009
பழமொழி 600
Posted by ஞானவெட்டியான் at 5:50 PM
Labels: பழமொழி 600
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment