142.உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
143.உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
144.உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
145.உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
146.உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
147.உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
148.உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
149.உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
150.உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
151.உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
152. உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு இல்லை; காரியத்துக்கு கால் வீசை நெய்யாம்.
153.உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
154.உரலுக்கு ஒருபக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
155.உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
156.உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
157.உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
158.உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவதுபோல்
159.உலோபிக்கு இரட்டை செலவு.
160.உளவு இல்லாமல் களவு இல்லை.
161.உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா ?
162.உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
163.உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
164.ஊசியைக் காந்தம் இழுக்கும்; உத்தமனை நட்பு இழுக்கும்.
165.ஊணுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.
166.ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
167.ஊரார் பண்டம் உமிபோல்; தன் பண்டம் தங்கம் போல.
168.ஊரார் வீட்டு நெய்யே , என் பெண்டாட்டி கையே.
169.ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
170.ஊரை வளைத்தாலும் உற்ற துணையில்லை; நாட்டை வளைத்தாலும் நல்ல துணையில்லை.
171.ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள
172.ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
173.ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி
174.ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
Saturday, February 07, 2009
பழமொழி 600
Posted by ஞானவெட்டியான் at 5:50 PM
Labels: பழமொழி 600
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment