109.இக்கரை(மாட்டு)க்கு அக்கரை பச்சை.
110.இஞ்சி இலாபம் மஞ்சளில்.
111.இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
112.இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.
113.இந்திரனை சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமனைக் கையாலே மறைப்பாள்.
114.இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
115.இன்னைக்கு செத்தா நாளைக்கு இரண்டு
116.இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
117.இமையின் குத்தம் கண்ணுக்குத் தெரியாது.
118.இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
119.இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
120.இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
121.இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை
122.இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
123.இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
124.இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்குமா?
125.இறுகினால் களி , இளகினால் கூழ்.
126.இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்.
127.இலை அறுத்தவன் குலை அறுக்கமாட்டானா?
128.இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
129.இல்லாமல் பிறாவது அள்ளாமல் குறையாது.
130.இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
131.இளங்கன்று பயமறியாது
132.இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
133.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
134.இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்
135.இளைத்தவன் பெஞ்சாதி எல்லாருக்கும் மச்சினி
136.இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
137.ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
138.ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
139.ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் எடுகுமரி
140.ஈயத்தைக் காச்சிக் காதில ஊத்தினாப் போல
141.ஈர நாவிற்கு எலும்பில்லை.
0 Comments:
Post a Comment