Wednesday, February 11, 2009

பழமொழி நானூறு - 2

2. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

ஆற்றுதல் - செய்தல்
சுரம் - வழி கடந்து
சுரம்போக்கி - பாலையில் வழி கடத்தல்
உல்கு - தீர்வைப் பொருள், ஆயம்
மரம் - ஓடம்
புணருமோ - சொல்லலாமோ

பாலையில் மிக்க வழி கடந்து தீர்வைப் பொருள்(ஆயம்) அடைபவர்கள் இல்லை; ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெற்றுக்கொள்பவர்கள் இல்லை. அதுபோல கல்வி கற்கும் காலத்தே கற்காதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆவான் எனச் சொல்லுதல் கூடுமோ? இல்லை.

பழமொழிகள்:
*************
1. சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை
2. மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்லை

“தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே” எனும் இக்காலப் பழமொழியுடன் ஒத்து வருவது காண்.

0 Comments: