2. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.
ஆற்றுதல் - செய்தல்
சுரம் - வழி கடந்து
சுரம்போக்கி - பாலையில் வழி கடத்தல்
உல்கு - தீர்வைப் பொருள், ஆயம்
மரம் - ஓடம்
புணருமோ - சொல்லலாமோ
பாலையில் மிக்க வழி கடந்து தீர்வைப் பொருள்(ஆயம்) அடைபவர்கள் இல்லை; ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெற்றுக்கொள்பவர்கள் இல்லை. அதுபோல கல்வி கற்கும் காலத்தே கற்காதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆவான் எனச் சொல்லுதல் கூடுமோ? இல்லை.
பழமொழிகள்:
*************
1. சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை
2. மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்லை
“தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே” எனும் இக்காலப் பழமொழியுடன் ஒத்து வருவது காண்.
Wednesday, February 11, 2009
பழமொழி நானூறு - 2
Posted by ஞானவெட்டியான் at 9:48 AM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment