நாகர் சித்தர் முதலியோர் வருதல்
***************************************
2.37 உரகர் சித்தர்கள் வித்தியா தரர்சுர ருயர்கிம்
புருடர் மெய்க்கதிர் முதலிய கோள் திசை புரப்போர்
நிருதர் மற்றுளார் விழிபிதுங் கிடவுடல் நெருங்க
வரதன் அத்திரு வோலைக்கங் காணிய வந்தார்.
உரகர் - நாகர்.
சுரர் - தேவர்.
வித்தியாதரர் - மேகவாகனர்கள்
சுரர் - வானோர்
நிருதர் - இராக்கதர், அசுரர்
மெய்க்கதிர் - உண்மை ஞாயிறு.
திசை புரப்போர் - எட்டு திக்குகளையும் ஆள்வோர்.
வரதன் - மேன்மைகளை அளிக்கும் கடவுள்.
காணிய - காணும் பொருட்டு.
நாகர், தேவர், மேகவாகநர்கள், வானோர், ஞாயிறு முதலிய கோட்கள், திசைகளைக் காப்போர், இராக்கதர்கள் ஆகிய யாவரும் மேன்மை அளிக்கும் கடவுளின் திருவோலக்கம் காணக் கூட்டத்தால் உடல் நெருங்க விழி பிதுங்கி ஒன்றுகூடி வந்தனர்.
Wednesday, February 11, 2009
பிரபுலிங்க லீலை - 2.37
Posted by ஞானவெட்டியான் at 12:03 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment