Wednesday, February 11, 2009

பிரபுலிங்க லீலை - 2.37

நாகர் சித்தர் முதலியோர் வருதல்
***************************************
2.37 உரகர் சித்தர்கள் வித்தியா தரர்சுர ருயர்கிம்
புருடர் மெய்க்கதிர் முதலிய கோள் திசை புரப்போர்
நிருதர் மற்றுளார் விழிபிதுங் கிடவுடல் நெருங்க
வரதன் அத்திரு வோலைக்கங் காணிய வந்தார்.

உரகர் - நாகர்.
சுரர் - தேவர்.
வித்தியாதரர் - மேகவாகனர்கள்
சுரர் - வானோர்
நிருதர் - இராக்கதர், அசுரர்
மெய்க்கதிர் - உண்மை ஞாயிறு.
திசை புரப்போர் - எட்டு திக்குகளையும் ஆள்வோர்.
வரதன் - மேன்மைகளை அளிக்கும் கடவுள்.
காணிய - காணும் பொருட்டு.

நாகர், தேவர், மேகவாகநர்கள், வானோர், ஞாயிறு முதலிய கோட்கள், திசைகளைக் காப்போர், இராக்கதர்கள் ஆகிய யாவரும் மேன்மை அளிக்கும் கடவுளின் திருவோலக்கம் காணக் கூட்டத்தால் உடல் நெருங்க விழி பிதுங்கி ஒன்றுகூடி வந்தனர்.

0 Comments: