Friday, January 16, 2009

பழமொழி நானூறு - பாயிரம்

பாயிரம்
************

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னன் நான்கடியும் செய்தமைத்தான்
இந்துறை வெண்பா இவை.

அசோக மரத்து நிழலில் எழுந்தருளியுள்ள அருகக் கடவுளின் திருவடி தொழுது, பழைய பழமொழிகளைத் தழுவி இந்நானூறு பழமொழிகளையும் முன்றுறையரையனாரே இனிய பொருள் துறைகள்(அறம், பொருள், இன்பம், வீடு) அமைந்த நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களாய் சுவை சொட்ட யாத்து(பாடி) அமைத்தான்.

0 Comments: