126.என்னனைக் கன்று முத்தனைக் குனிக்கு
மிறைவனை யணைக்கு மேயன்று
மன்னனைக் கன்று பிள்ளைக் குதவா
வன்பினால் வருந்தி வாடுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த
முதுபகை வன்பிதா வுறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் காத்த
கவத்துவ இராம கிருட்டிணனே.
(இடைச் செருகல்)
முத்துவுக்கும், கரும்பை வில்லாக உடைய மன்மதனுக்கும் தாயாய் விளங்கும் கடலைத் தாயாய் உடைய இலக்குமியை அணைப்பவன் நாரணனே! பிள்ளைக்கு உதவ இயலாத தயரதனின் பிள்ளை இராமனும் அவனே! வாலியைக் கொன்று சுக்கிரீவனைக் காத்து அப்பழி அவன் தந்தை இந்திரனை அடையவிடாதபடி தடுத்தவனும் அவனே! கர்ணனைக் கொன்று அருச்சுனனைக் காத்ததும் கபடம் நிறைந்த இராம கிருட்டிணனே!
Sunday, January 04, 2009
விவேக சிந்தாமணி - 126
Posted by ஞானவெட்டியான் at 5:43 PM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment