இந்திரர்கள் வருகை
****************
2.36 அயனு மாயனும் எனினுயர்ந் தவரென்ப தன்றிக்
கயிலை நாயகன் அமர்திரு வோலக்கங் காண்பான்
நயனம் ஆயிரம் இலாமையி னதிகன்நா னென்று
வயிர வான்படை யிந்திரர் எண்ணிலர் வந்தார்.
அயனும் - நான்முகனும்.
மாயனும் - திருமாலும்.
நயனம் - கண்.
வயிரவன் படை - சிறந்த வச்சிரப்படை.
நான்முகனும் திருமாலும் செயலால் உயர்ந்தவர் யார் என அறிய அடிமுடி தேடி முடிவு அறியாது கயிலை நாதனின் திருச்சந்நிதி அடைந்தனர். ஆயிரங் கண்களாற் பார்க்கப்படுஞ் செயலால் நானே சிறந்தவன் என எண்ணி வச்சிரப்படை தாங்கிய இந்திரரும் அங்கே வந்தனர்.
Friday, January 16, 2009
பிரபுலிங்க லீலை - 2.36
Posted by ஞானவெட்டியான் at 5:13 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment