Friday, January 16, 2009

பிரபுலிங்க லீலை - 2.36

இந்திரர்கள் வருகை
****************

2.36 அயனு மாயனும் எனினுயர்ந் தவரென்ப தன்றிக்
கயிலை நாயகன் அமர்திரு வோலக்கங் காண்பான்
நயனம் ஆயிரம் இலாமையி னதிகன்நா னென்று
வயிர வான்படை யிந்திரர் எண்ணிலர் வந்தார்.

அயனும் - நான்முகனும்.
மாயனும் - திருமாலும்.
நயனம் - கண்.
வயிரவன் படை - சிறந்த வச்சிரப்படை.

நான்முகனும் திருமாலும் செயலால் உயர்ந்தவர் யார் என அறிய அடிமுடி தேடி முடிவு அறியாது கயிலை நாதனின் திருச்சந்நிதி அடைந்தனர். ஆயிரங் கண்களாற் பார்க்கப்படுஞ் செயலால் நானே சிறந்தவன் என எண்ணி வச்சிரப்படை தாங்கிய இந்திரரும் அங்கே வந்தனர்.

0 Comments: