கடவுள் வணக்கம்
*********************
அரிதவித்(து) ஆசின்(று) உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்(து)
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது.
அரிது - முக்குற்றங்கள்(காமம், வெகுளி, மயக்கம்)
அவித்து - அழித்து நீக்கி
ஆசு - குற்றம்
வியன்கண் - அகன்ற
ஓக்கம் - உயர்வு
காமம், வெகுளி, மயக்கம், ஆகிய முக்குற்றங்களையும் அழித்துக் குற்றமின்றி முற்றும் உணர்ந்தவனாம் இறைவனின் பாதத்தையே, அகன்ற கடலால் சூழப்பட்ட பரந்த இவ்வுலகில், தன் உரிமைப் பொருளைப்போல் கருதி உணர்ந்து அறிந்தவர்களின் உயர்வே பேருடலையுடைய ஆவியைப் போன்று பெரியது.
பழமொழி - “பெரியதன் ஆவி பெரியது.”
Saturday, February 07, 2009
பழமொழி நானூறு - கடவுள் வணக்கம்
Posted by ஞானவெட்டியான் at 12:13 PM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment