Tuesday, December 23, 2008

சிவவாக்கியர் பாடல் - 89

89. நெஞ்சிலே யிருந்திருந்து நெருக்கியோடும் வாயுவை
அன்பினா லிருந்துநீ ரருகிருத்த வல்லீரேல்
அன்பர்கோயில் காணலா மகன்று மெண்டிசைக்குளே
தும்பியோடி யோடியே சொல்லடா சுவாமியே!

தும்பி - வண்டு

நெஞ்சிற்கும் மூக்கிற்குமாய் ஓடும் உயிர் வாயுவைச் செயலாலும்(புணர்ச்சி) பேச்சாலும் வீணாக்காது உள்ளுக்குள்ளே அடக்கி மனதைச் சலனமின்றிக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்த கோ(இறைவன் நடனமாடும்)இல் காணலாம்.அதை விடுத்து எட்டு திசைகளிலும் இறைவனைத் தும்பி இனத்து வண்டுபோலப் (பரக்கப் பரக்கத்) பறந்து தேடினும் பலனேதுமில்லை எனச் சொல்லடா சுவாமியே!

0 Comments: