உருத்திரகணிகையர் கூத்தியற்றுதல்
2.31 செப்ப மைந்ததண் ணுமையிசை தாளமென் சிறுதாள்
துப்ப மைந்தவொண் சதிதழீஇச் சுவையபல் காயம்
உப்ப மைந்தஇன் கறியென நடித்தனர் உழையோ
டொப்ப மைந்தகண் உருத்திர கணிகையர் உவந்து.
செப்பு அமைந்த - புகழமைந்த.
தண்ணுமை - மத்தளம்.
சிறுதாள் - சிறிய அடிகளது.
துப்பமைந்த - நன்மை பொருந்திய.
ஒண் சதி தழீஇ - அழகிய மிதிப்பினைத் தழுவி நடித்தனரென்க.
உழை - மான்
உவந்து மகிழ்ந்து
மானின் கண்களை ஒத்த கண்களை உடைய உருத்திர கணிகையர் புகழமைந்த மத்தள இசை போன்ற சிறிய அடிகளது நன்மை பொருந்திய அழகிய மிதிப்பினைத் தழுவி நடித்தனராம். எவ்வாறு?
இனிய கறியானது, எப்படி அளவு ஒத்த சுவையினை உடைய கூட்டுப் பொருட்களால் மகிழ்ச்சியை வரவழைக்கிறதோ, அவ்வாறு மகிழ்ச்சி உண்டாக்கும்படி மத்தளம் முதலியவற்றைத் தழுவி நடித்தனர்.
இது ஒப்பணி.
Wednesday, December 24, 2008
பிரபுலிங்க லீலை - 2.31
Posted by ஞானவெட்டியான் at 3:23 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment