கலைமடந்தையர் வீணை மீட்டுதல்
**************************************
2.30 எடுத்து வீணைகள் உளர்நரம் பிதுமிட றிதுவென்
றடுத்த கேள்வராம் பிரமரும் அறிவரி தாகப்
படத்த பாம்பணி பரன்புடை மாதுசீர் பாட்டில்
தொடுத்து வாலிய கலைமடந் தையர்பலர் துதித்தார்.
உளர் - தெரிக்கப்படுகிற.
நரம்பு இது - நரம்பின் ஒலி இது.
மிடறு இது - கண்டத்தின் ஒலி இது.
அடுத்த - அக்கலை மடந்தையர்களுடன் தொடர்புள்ள.
கேள்வராம் - தலைவன்
பிரமர் - முதற்குரு.
படத்த - படத்தினையுடைய.
பரன்புடை மாது - இறைவன் பக்கத்தில் அமர்ந்துள்ள இறைவி.
சீர் - சிறப்பினை.
பாட்டில் தொடுத்து - பாட்டில் அமைத்து.
வாலிய கலை மடந்தையர் - வெண்ணிறமுடைய கலைமகளிர்.
படத்தை உடைய பாம்பினை அணியாகக் கொண்ட இறைவனின் அருகே அமர்ந்துள்ள இறைவியின் சீர் சிறப்பினை வெண்ணிறத்தை உடைய கலை மகளிர் வீணைகளை எடுத்துத் தெரிக்கப்படுகின்ற நரம்பின் ஒலி இது, கண்டத்தில் இருந்து பாடும்பொழுது வெளி வரும் குரல் ஓசை இது எனத் தத்தம் முதற்குருவாகிய தலைவன்கூடப் பிரித்து அறிய முடியாதவாறு துதித்தனர்.
நரம்பு ஒலியுங் கண்டத்தின் ஒலியுந் தத்தம் குருவால்கூடக் கண்டறியமுடியாதவாறு அவ்வளவு பொருத்தமுறப் பாடினராம்.
Tuesday, December 23, 2008
பிரபுலிங்க லீலை - 2.30
Posted by ஞானவெட்டியான் at 3:37 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment