இரு சகோதரிகள் தங்களின் தலைவனை வருணித்தல்
*************************************************
123.அரவிந்தநண்பன் சுதன்றம்பி மைத்துனன் அண்ணன்கையில்
வரமுந்தியாயுதம் பூண்டவன் காணுமற் றங்கவனே
பரமன்றி கிரியையேந்திய மைந்தன் பகைவன்வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான்றன் சேவகனொண்தொடியே.
தமக்கை கூற்யது:
என் வீட்டிற்கு வந்தவன் தாமரைக்கு நண்பனாம் சூரியன், அவன் மைந்தன் கர்ணன், அவன் தம்பி அருச்சுனன், அவன் மைத்துனன் கண்ணன், அக்கண்ணனின் அண்ணன் பலராமன், அப்பலராமனின் கையில் உள்ள கலப்பை ஆயுதம், அதைத் தாங்கும் எருமைக்கடாவாகும்.
தங்கை கூறியது:
என் வீட்டிற்கு வந்தவன் சிவன் வசிக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணன், அவ்விராவணனின் பகைவனான இராமன், அவன் தொண்டனும், இராவணனை எதிர்த்து மலையைப் பெயர்த்தெடுத்துப் போர் புரிந்தவனுமாகிய அநுமனும் ஆகும்.
Monday, December 22, 2008
விவேக சிந்தாமணி - 123
Posted by ஞானவெட்டியான் at 12:51 PM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment