இந்திராணிகள் சிற்றாலவட்டம் வீசுதல்
2.29 அரவு கெளவிய கதிரெனப் பட்டசாந் தாற்றி
பரவை அல்குல்வெண் முத்தவாள் நகைக்கொலை பயில்வில்
புருவ மென்மலர்க் குழற்சசி கோடிகள் புகன்று
மருவி அம்பிகை மருங்குநின் றசைத்தனர் மன்னோ.
சிற்றாலவட்டம் - விசிறி
அரவு கெளவிய கதிர் - பாம்பினாலே கெளவப்பெற்ற சுடர்(ஞாயிறு திங்கள்).
சாந்தாற்றி - சிற்றாலவட்டம்.
பரவை அல்குல் - பரப்பினையுடைய அல்குல்.
கொலை பயில் - கொலையைப் பழகுகின்ற.
வில்புருவம் - வில்லைப்போன்ற புருவம்
சசிகோடிகள் - கோடி இந்திராணிகள்.
புகன்று - வாழ்த்துரை கூறி.
மருவி - பொருந்தி.
மருங்கு - பக்கம்.
வாள்நகை - ஒளிபொருந்திய பற்கள்.
தங்கத்தால் செய்யப்பட்ட விசிறி பாம்பு விழுங்கும் சூரியன்.
முத்துக்களால் செய்யப்பட்ட விசிறி பாம்பு விழுங்கும் சந்திரன்.
ஆக சூரியனையும் சந்திரனையும் ஒத்த விசிறிகளால் கோடி இந்திராணிகள் வாழ்த்துப்பா கூறி அம்பிகையின் அருகே நின்று விசிறி வீசுகின்றனர். கோடி இந்திராணிகள் எப்படிபட்டவர் என வருணிக்கிறார். பரந்த அல்குல் உடையோர்; வெண்முத்துப்போல் ஒளிவீசும் பற்கள்; கொலைசெய்ய உதவும் வில்போல் புருவம்.
ஈண்டு அரவு கெளவிய கதிர் எனப் பொதுவாகக் கூறினார். சிற்றாலவட்டங்கட்கு பாம்பின் உடல்தான் காம்பு. இது மயக்கவணி.
Friday, December 19, 2008
2.29 - பிரபுலிங்க லீலை
Posted by ஞானவெட்டியான் at 10:41 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment