122.அறங்கெடு நிதியுங்குன்று மாவியு மாயுங்காய
நிறங்கெடு மதியும்போகி நீண்டதோர் நரகிற்சேர்க்கு
மறங்கெடு மறையோர் மன்னன்வணிகர் நல்லுழவோரென்றுங்
குலங்கெடு வேசைமாதர் குணங்களை விரும்பிவோர்க்கே.
இப்படியுங் கூறுவர்:
அறங்கெடு நிதியுங் குன்றுமாவியு மாயுங்காய
நிறங்கெடு மதியும்போகு நீண்டதோர் நரகங்கிட்டும்
மறங்கெடுங் கீர்த்தி நீங்கும் வசைமொழி பரவுஞ்சாதித்
திறங்கெடும் வேசைமாதர் சேர்க்கையை விரும்பினோர்க்கே.
மறையோர் = வேதியர்
வேசை = விலைமாதர்
காயம் = உடல்
மதி = அறிவு
மறம் = வீரம்
கீர்த்தி = புகழ்
திறம் = மேன்மை
மனித இனத்தை, வேதியர், மன்னன், வணிகர், உழவர் ஆகிய பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.(இதில் எமக்கு உடன்பாடு இல்லை). ஆகவே உடல் ஆசைக்காக பரத்தையரை நாடி விரும்பும் மனுக்குலத்தில் உள்ள அனைவரின் தருமம் கெடும்; ஈட்டிய பொருளும் கெட்டுக் குறைந்துவிடும்; விந்து விரையத்தால் சக்தி குறைந்து வீரம் கெட்டு உயிரும் போகும்; ஊரில் உள்ளவர்களின் ஏளனம் கூடும்; மேன்மை குறையும்; சக்தி குறைவால் உடல் அழகு குன்றும்; அறிவு மழுங்கும். இவை அழிந்தால் நீண்ட நெடிய நரகு கிட்டும்.(இவ்வுலகில் இருந்து அடையும் இன்னல்களே நரகாகிவிடும்)
Friday, December 19, 2008
122.விவேக சிந்தாமணி
Posted by ஞானவெட்டியான் at 10:11 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment