Thursday, December 25, 2008

கந்தர் கலிவெண்பா - 17

தேவர்க் குதவும் திருக்கரமுஞ் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கி லொருகரமும் - மொய்த்த
சிறுதுடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசம ரங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்

கரம் - கை
சூர்மகளிர் - அஞ்சத்தக்க தெய்வப் பெண்கள்
தொடையல் - மாலை
வாமமருங்கு - இடப்பக்கம்
குறங்கு - துடை
மொய்த்த - நெருங்கிய
தொடி - வீரவளை
கறுவு - சினத்தைக் காட்டும்
சமர் - போர்
தெறு - அழிக்கின்ற


கிடைத்தற்கு அரிய அமுதத்தைத் தேவர்களுக்கு கொடுக்கின்ற திருக்கையும், தேவ மங்கையர் விரும்பித் தழுவ அவர்களை அணைத்த திருக்கையும், குறைவில்லாது மழை பொழியச்செய்த தாமரை போன்ற திருக்கையும், பூமாலை திருமேனியில் பொருந்தும்படி அமைந்த திருக்கையும், தனது திருமார்பின் மீது வைத்துக்கொண்டிருக்கும் திருக்கையும், இடுப்பின் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் திருக்கையும், தொடைமீது வைத்துள்ள திருக்கையும், நெருங்கின் வீர வளைகள் அணிந்த திருக்கையும், இரத்தினங்கள் பொருத்திய அணிகலன் அணிந்த திருக்கையும், சினம் மிகுந்து செய்யும் போரில்........

0 Comments: