இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
******************************************************************
அதிர்கே டகஞ்சுழற்று மங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமு - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொற்
புரிநூலுங் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணுங் கச்சையழகும் - திருவரையும்
நாதக் கழலு நகுமணிப்பொற் கிண்கிணியும்
பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி
விதிர்க்கும் - அசைக்கும்
கொடியிடை - கொடி போல் மெலிந்த இடை
வேட்டு - விரும்பி
பொற்புரிநூல் - பொன்னால் செய்யப்பட்ட முப்புரி நூல்
பூம்பட்டு - பூவேலை செய்யப்பட்ட அழகிய பட்டு
கண்டிகை - உருத்திராக மாலை, பதக்கம்
கச்சை - இடையில் அணியும் துண்டு
நாதக் கழல் - ஒலிமிக்க வீரத் தண்டை
நகுமணி - விளங்கும் இரத்தினம்
பரிபுரம் - சிலம்பு
போரில் எடுத்த துரட்டி உடைய திருக்கையும், பகைவரை அழிக்கின்ற போரில் அதிர்ச்சி உண்டாக்கக் கூடிய கேடையம் சுழற்றும் திருக்கையும், ஒளி வீசுகின்ற வாளினை வீசும் திருக்கையும், ஆகிய பன்னிரண்டு திருக்கைகளை உடைய பெருமானே! முதுமை அடையாது இளமைத் தன்மையுடைய கும்பம் போன்ற மார்பகங்களையும் சிவந்த வாயையும் கொடி இடையும் உடைய மாதர்கள் அன்பால் தழுவிய அழகிய பொன் அணிகள் அணிந்த பரந்த மார்பும், பசும் பொன்னால் ஆகிய முப்புரி நூலும், உருத்திராக்க மாலையும், பூவேலை செய்யப்பட்ட அழகிய பட்டு ஆடையும் அரை ஞாணும் அரைக் கச்சையும் அணிந்த இடுப்பும், ஒலி உடைய வீரக் கழலும் விளங்குகின்ற இரத்தினங்கள் பதித்த பொன் கிண்கிணிச் சரமும் சிலம்பும் அணிந்த கால்களும்.........
Friday, December 26, 2008
கந்தர் கலிவெண்பா - 18
Posted by ஞானவெட்டியான் at 4:50 PM
Labels: கந்தர் கலிவெண்பா, குமரகுருபரர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment