இரு நண்பர்கள் தங்கள் கண்ட விலைமாதரை வருணித்தல்
******************************************************
124.சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
ஆங்கவள் ஏறிய வாகனம் காணிவள் மற்றங்கவளோ
கொங்கைகள் ஈரைந்து உடையவளாயிக் குவலயத்தில்
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே.
நண்பனே! நான் கண்டவள் சிவனின் இல்லாள் பார்வதி; அவள் தமையன் திருமால்; திருமாலின் மனைவி இலக்குமி; அவள் தமக்கை மூ(த்த)தேவி; அவள் ஏறிய வாகனமாம் கழுதை என்று அறிக.
மற்றவன் கூறியது: நான் கண்டவள் வயிரவக் கடவுளின் வாகனம்; பத்து மார்பகம் உடையவள்; ஊரெங்கும் சுற்றி அலையும் நாய் என அறிக.
(இது இடைச் செருகலாம்)
Thursday, December 25, 2008
விவேக சிந்தாமணி - 124
Posted by ஞானவெட்டியான் at 3:53 PM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment