தமோகுணத்தை உடைய மாதின் தருக்கு
**********************************************
2.32 எந்தை பாலுமை முக்குணங் களுமுரு வெடுத்து
வந்த மாதர்கள் அருகுநின் றனர்பணி மகிழூஉ
அந்த மாதருள் தமோகுண மாதுமை அருளால்
சந்த மாயையென் பெயர்கொடு தருக்கிநின் றனளே.
எந்தை - இறைவன்.
முக்குணம் - சத்துவகுணம், இராட்சத குணம், தாமதகுணம்.
பணிமகிழூஉ- குற்றேவல் செய்தலில் மகிழ்ந்து.
இறைவனுடன் உமை கொலுவீற்றுள்ளாள். அங்கு உமையம்மையைச் சுற்றி சத்துவகுணம், இராட்சத குணம், தாமதகுணம் என்னும் மூன்று குணங்களும் மாதர் உருவெடுத்துச் சுற்றி நிற்கின்றனர். அம்மாதர்களுள் தமோகுணமாது, இறைவியின் திருவருளை மிகுதியாகப் பெற்றிருந்ததால், நல்ல அழகையும் மாயை என்னும் பெயரையுங் கொண்டு இறுமாந்து நின்றாள்.
Thursday, December 25, 2008
பிரபுலிங்க லீலை - 2.32
Posted by ஞானவெட்டியான் at 3:40 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment