Saturday, November 29, 2008

சிவவாக்கியர் பாடல் - 87

87.சோதியாதி யாகிநின்ற சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை வோதுகின்ற பூரணா
வீதியாக வோடிவந்து விண்ணடியி னூடுபோய்
ஆதிநாத னாதனென் றனந்தகால முள்ளதே.

போதியாத = விண்டு உரைக்காத (சொல்லாத)
போதம் = ஞானத் தெளிவு
விண் = ஆகாயம்

பக்தி:
எல்லாவற்றிற்கும் முதலானதும் சோதியாகவும் இருந்து அனைத்து செல்வங்களையும் வழங்கும் (இதுவரை யாரும் விண்டுரைக்காத) ஞானத் தெளிவை ஓதும் பரிபூரணமே!
உன்னைத் தேடி வீதி வழி ஓடிவந்து ஆகாயத்தின் அடியில் உட்சென்று ஆதிநாதன் நீதான் என்றுணர இன்னும் எத்தனை காலமுள்ளதோ?

சூக்குமம்:
வீதி = உடலினுள் செல்லும் நாடி நரம்புகள்(குழல்கள்)
ஆகாயத்தின் அடி = தலையினுள்

0 Comments: