2.28 அன்னம் ஒன்றறி யாமுடிக் கங்கையை யறிந்து
துன்ன வந்தல மருமெகி னங்களின் தொகுதி
என்ன அம்புயத் தொருசத கோடியிந் திரைகள்
முன்ன டைந்துவெண் கவரிகள் இரட்டினர் முறையால்.
துன்ன - நெருங்க.
அலமரும் - சுழலுகின்ற.
எகினங்களின் தொகுதி - அன்னப்பறவைகளின் கூட்டம்.
அம்புயத்து- தாமரை மலர்களில் உள்ள.
சதகோடி - நூறுகோடி.
இந்திரைகள் - திருமகளிர் (இலக்குமியர்).
கவரிகள் - சாமரைகள்.
இரட்டினர் - புறத்தும் வீசினார்கள்.
பிரமன் அன்னப்பறவை யுருக்கொண்டு தேடி யறியாத முடி- சிவ பெருமான் முடியாதலால் அன்னம் ஒன்றறியா முடி எனச் சிறப்புக் கூறினர்.
திருமகளிர் கவரி வீசுதல்
சாமரைகள் வெண்ணிறமுடையன. அவைகளை அசைத்து வீசுதல் அன்னப் பறவைகள் கூட்டம் சுழல்வதை ஒத்துள்ளன. முன்னே ஓரன்னத்தாற் காணமுடியாத திருமுடியில் உள்ள கங்கையை அறிந்து அதில் தங்குவதற்குப் பல அன்னங்கள் வந்து சுழல்வதுபோல் தாமரை மலரில் உள்ள நூறுகோடி இந்திரைகள் வெண்சாமரைகளை(கவரி) வீசினர்.
Saturday, November 29, 2008
2.28 - பிரபுலிங்க லீலை
Posted by ஞானவெட்டியான் at 3:33 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment