2.27 முல்லை யந்தொடை அருந்ததி முதலெழு முனிவர்
இல்ல றம்புரி துணைவிய ராமெழு வரும்போய்
வல்ல ரும்பெனக் குவிமுலைப் பனிமலை மகளைச்
சொல்ல ருந்துதி செய்துவாழ்த் தெடுத்தனர் தொழுது.
முல்லை அம்தொடை - அழகிய முல்லைப் பூமாலை.
வல்-சூதாடு கருவி.
அரும்பு - தாமரைமொட்டு.
வாழ்த்து எடுத்தனர் - வாழ்த்துப்பாடினர்.
சொல் அரும் துதி செய்து - சொல்லால் அருமையான துதி புரிந்து.
முல்லைமாலை கற்புடைய மாதர்க்குரியது.
முதல் ஏழு முனிவர்களின் இல்லத்தரசிகளாம் அருந்ததி முதலிய எழுவர். இவர்கள் அழகிய முல்லை மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலை அணிந்து பனிமலை மகளாம் பார்வதியிடம் செல்லுகின்றனர். பார்வதியின் அழகினை சூதாடும் சொக்கட்டானின் முனை எப்படிக் கூர்மையாய் உள்ளதோ அங்ஙனம் உள்ள குவிமுலையாள் என வருணிக்கிறார். கற்புடை மாதர் எழுவரும் அங்கு சென்று சொல்லற்கரிய சொற்களால் துதித்து வணங்கி வாழ்த்துப் பா பாடினர்.
Saturday, November 22, 2008
2.27 - பிரபுலிங்க லீலை
Posted by ஞானவெட்டியான் at 11:09 AM
Labels: பார்வதி, பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment