பட்டாடையும் மேகலையும்
2.24 தோலு டைப்பரன் தொல்மனை யாட்டிதன்
பால டுத்ததெவ் வாறெனும் பட்டரை
மேலு டுத்து விளங்கவொண் மேகலை
நூலி டைக்குறு நோய்புரி யாது ற.
தோல் உடைப்பரன் - புலித்தோலையும் யானைத்தோலையும் உடையாக அணிந்துள்ள கடவுள்.
தொல்-பழமையையுடைய.
ஒண் - ஒள் - அழகிய
ஒண்மேகலை - அழகிய மேகலை.
உறுநோய்-மிகுந்த நோய்.
புலித்தோலையும் யானைத்தோலையும் உடையாக அணிந்துள்ள கடவுளின் இல்லாள் வியக்கத்தக்க பட்டாடையை இடுப்பில் உடுத்தி அதன்மேல் ஒளி பொருந்திய மேகலையைத் தன் நூல்போன்ற இடுப்பு நோகாவண்ணம் பூட்டி இருப்பது எங்ஙனம்?
தோலுடையான் மனையாட்டிக்குப் பட்டாடை யெவ்வாறு கிடைத்தது என்பது கருத்து.
Sunday, June 29, 2008
பிரபுலிங்க லீலை - 2.24
Posted by ஞானவெட்டியான் at 9:13 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment