Sunday, June 29, 2008

பிரபுலிங்க லீலை - 2.24

பட்டாடையும் மேகலையும்

2.24 தோலு டைப்பரன் தொல்மனை யாட்டிதன்
பால டுத்ததெவ் வாறெனும் பட்டரை
மேலு டுத்து விளங்கவொண் மேகலை
நூலி டைக்குறு நோய்புரி யாது ற.


தோல் உடைப்பரன் - புலித்தோலையும் யானைத்தோலையும் உடையாக அணிந்துள்ள கடவுள்.
தொல்-பழமையையுடைய.
ஒண் - ஒள் - அழகிய
ஒண்மேகலை - அழகிய மேகலை.
உறுநோய்-மிகுந்த நோய்.

புலித்தோலையும் யானைத்தோலையும் உடையாக அணிந்துள்ள கடவுளின் இல்லாள் வியக்கத்தக்க பட்டாடையை இடுப்பில் உடுத்தி அதன்மேல் ஒளி பொருந்திய மேகலையைத் தன் நூல்போன்ற இடுப்பு நோகாவண்ணம் பூட்டி இருப்பது எங்ஙனம்?

தோலுடையான் மனையாட்டிக்குப் பட்டாடை யெவ்வாறு கிடைத்தது என்பது கருத்து.

0 Comments: