Tuesday, July 01, 2008

பிரபுலிங்க லீலை - 2.25

அடிகளிற் சிலம்பு

2.25 புத்த னிச்சம் படினும் பொறாமையை
எய்த்து மற்றை யிருமணத் தம்மியில்
அத்தன் வைத்த அடிக்கம லங்களின்
முத்த ரிச்செஞ் சிலம்பு முழங்குற.

புத்து அனிச்சம் - புதிய அனிச்சமலர்.
எய்த்தும்- உணர்ந்திருந்தும்.
அத்தன்-இறைவன்.
முத்து அரி-முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட.

இருமணம் என்பது மலையரசன் மகளாகப் பிறந்து மணம் புரிந்ததையும், மலையத்துவச பாண்டியன் மகளாகப் பிறந்து மணம் புரிந்ததையும் குறிக்கும். இவ்விரு மணங்களிலும் அம்மியின்மீது இறைவன் வைத்த பாதங்கள் எப்படி இருந்ததாம்? இப்பாதங்களைக் கண்டு புது அனிச்ச மலர் பொறாமை கொண்டதாம். இப்படிப்பட்ட பாதங்களில் இறைவன் முத்துப் பரல்கள்களை உள்ளடக்கிய சிலம்பு அணிந்துள்ளார்.

0 Comments: