கையில் கருங்குவளைமலரும் பைங்கிளியும்
2.23 பறந்தி டாமணி வண்டு படுமலர்
சிறந்த நீல மலரொடு சீர்பெற
மறந்தி டாது மறைமுடி யின்பொருள்
அறைந்து பைங்கிளி முன்கை அமர்ந்திட.
மணி வண்டு - அழகிய வளையல்.
படுமலர் - பொருந்திய மலர்போன்ற கை.
நீலமலர் - கருங்குவளை மலர்.
அறைந்து-சொல்லி.
மறக்காமல் வேதமுடிவின் பொருள் கூறிய அம்மையின் அழகிய வளையல் பொருந்திய மலர்போன்ற கையில் சிறந்த கருங்குவளை மலர் தாங்கியுள்ளாள். அவ்வழகிய வளையல் தாங்கிய முன்கையில் பைங்கிளி வந்து அமர்ந்துள்ளது.
பறக்கும் வண்டினை விலக்குதற்குப் பறந்திடா என அடை கொடுத்தனர். அவ்வண்டு படுமலர் எனவே கை என்பது குறிப்பாகத் தோன்றியது.
கையை மலராகவும் வளையல்களை வண்டாகவும் கூறியுள்ள நயத்தினைக் காண்க.
Thursday, June 26, 2008
பிரபுலிங்க லீலை - 2.23
Posted by ஞானவெட்டியான் at 9:03 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment