முத்துமாலை
2.22 அரவு லாஞ்சடை அண்ணலைப் பிள்ளைதான்
பருவ மூன்றினிற் பாடஇன் பால்தரும்
பொருளில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி
மருவும் ஆர மணிவடந் தாழ்ந்துற.
அரவு - பாம்பு.
அண்ணல் - சிவபெருமான்.
பிள்ளை - சம்பந்தர்.
இன்பால் - இனிய திருமுலைப்பால்.
பொருவுஇல் - ஒப்பில்லாத.
பொங்கு ஒளி மருவும் - மிகுதியான ஒளி பொருந்திய.
ஆர மணிவடம் - முத்தினாலாகிய அழகிய மாலை.
சம்பந்தர் மூன்றாண்டில் பாடுவதற்கு ஆற்றல் அளித்த இனிய பாலுடைய கொங்கையாதலிற் புகழ் நிறைந்தது எனவும், புகழின் நிறம் வெண்மையாதலால், அது போர்த்தது போல முத்து மாலையினொளி கொங்கைமேற் பரவியது எனவும் கூறப்பட்டுள்ளது. இது தற்குறிப்பேற்ற அணி.
Wednesday, June 25, 2008
பிரபுலிங்க லீலை - 2.22
Posted by ஞானவெட்டியான் at 9:05 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment