Wednesday, June 25, 2008

பிரபுலிங்க லீலை - 2.22

முத்துமாலை

2.22 அரவு லாஞ்சடை அண்ணலைப் பிள்ளைதான்
பருவ மூன்றினிற் பாடஇன் பால்தரும்
பொருளில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி
மருவும் ஆர மணிவடந் தாழ்ந்துற.

அரவு - பாம்பு.
அண்ணல் - சிவபெருமான்.
பிள்ளை - சம்பந்தர்.
இன்பால் - இனிய திருமுலைப்பால்.
பொருவுஇல் - ஒப்பில்லாத.
பொங்கு ஒளி மருவும் - மிகுதியான ஒளி பொருந்திய.
ஆர மணிவடம் - முத்தினாலாகிய அழகிய மாலை.


சம்பந்தர் மூன்றாண்டில் பாடுவதற்கு ஆற்றல் அளித்த இனிய பாலுடைய கொங்கையாதலிற் புகழ் நிறைந்தது எனவும், புகழின் நிறம் வெண்மையாதலால், அது போர்த்தது போல முத்து மாலையினொளி கொங்கைமேற் பரவியது எனவும் கூறப்பட்டுள்ளது. இது தற்குறிப்பேற்ற அணி.

0 Comments: