பூணரசாக விளங்கும் பொன்தாலி
2.21 ஓங்கு வாவுடை உம்பன் அயனரி
தாங்கும் ஆவி தணந்தொழி நாளினும்
வாங்கு றாவெழில் மங்கல நாணொளி
தேங்கு பூணர சென்னச் சிறந்திட.
ஓங்கு - உயர்ந்த,
உவா - யானை,
உம்பன் - தேவர்கோன்,
அயன் - நான்முகன்,
அரி - திருமால்,
தாங்கும் ஆவி - தாங்கியுள்ள உயிர்,
தணந்து - நீங்கி,
வாங்குறா - நீக்கப்பெறாத,
மங்கலநாண் - திருத்தாலிக்கயிறு.
பூண் அரசு - அணிகலன்களுக்குத் தலைமை.
உயர்ந்த யானைய உடைய தேவர்கோன், நான்முகன், திருமால் ஆகிய மூவரும் தாங்கியுள்ள உயிர் நீங்கிய காலத்தேயும் நீக்கப்பெறாத ஒளிதேங்கியுள்ள அணிகலன்களுக்குத் தலைமையாய் உள்ள திருத்தாலிக்கயிறு அணிந்துள்ளார் எம்பிரான்.
இந்திரன், பிரமன், திருமால், இம்மூவர் அழியுங் காலத்தும் வாங்குறா மங்கலநாண் எனக் கூறியதனால் இறைவனது நித்தியத் தன்மையும் மங்கலநாணின் பெருமையும் விளங்கின.
Sunday, June 22, 2008
பிரபுலிங்க லீலை - 2.21
Posted by ஞானவெட்டியான் at 8:55 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment