Friday, June 20, 2008

பிரபுலிங்க லீலை - 2.20

காதோலை

2.20 மாணப் பூண்புனை மற்றை உறுப்பெனப்
பூணுட் பட்டிடா தோலையின் பூணென
யாணர்ச் செம்பொன் இலங்கொளி யோலைமேற்
காணக் காதெனும் வள்ளை கவின்செய.

மாண - பெருமையுண்டாக,
பூண் புனை - அணிகலன்களைத் தாங்குகின்ற
பூணுள் பட்டிடாது - அணிகலன்களுக்கு உட்படாமல்,
ஓலையின்பூண் என - காதோலையின் அணிகலன் என்று சொல்லும்படி,
யாணர் - அழகு,
கவின் - அழகு.

காது தவிற பிறவுறுப்புக்கள் அணிகலன்களை அணிவதால் அணிகலன்களுக்கு உட்பட்டு அணிகலன்களால் அழகைப் பெறுகின்றன. காதுகளோ அவ்வாறு உட்படாமல் தாம் அழகான செம்பொன்னால் செய்ததால் ஒளி வீசும் பொன்ஓலையின் அணிகலன்களைப்போல நின்று அவைகட்கு அழகைச் செய்கின்றன.

0 Comments: