காதோலை
2.20 மாணப் பூண்புனை மற்றை உறுப்பெனப்
பூணுட் பட்டிடா தோலையின் பூணென
யாணர்ச் செம்பொன் இலங்கொளி யோலைமேற்
காணக் காதெனும் வள்ளை கவின்செய.
மாண - பெருமையுண்டாக,
பூண் புனை - அணிகலன்களைத் தாங்குகின்ற
பூணுள் பட்டிடாது - அணிகலன்களுக்கு உட்படாமல்,
ஓலையின்பூண் என - காதோலையின் அணிகலன் என்று சொல்லும்படி,
யாணர் - அழகு,
கவின் - அழகு.
காது தவிற பிறவுறுப்புக்கள் அணிகலன்களை அணிவதால் அணிகலன்களுக்கு உட்பட்டு அணிகலன்களால் அழகைப் பெறுகின்றன. காதுகளோ அவ்வாறு உட்படாமல் தாம் அழகான செம்பொன்னால் செய்ததால் ஒளி வீசும் பொன்ஓலையின் அணிகலன்களைப்போல நின்று அவைகட்கு அழகைச் செய்கின்றன.
Friday, June 20, 2008
பிரபுலிங்க லீலை - 2.20
Posted by ஞானவெட்டியான் at 9:11 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment