நெற்றியில் நெற்றிச்சுட்டி விளங்குதல்
2.18 ஏற்று வார்கொடி யெந்தை சடைப்பிறை
யாற்றுள் வீழ்வுற் றிறப்பதற் கெண்ணுறத்
தோற்ற மேவு சுடர்த்திரு நெற்றியன்
ஞாற்று மோர்மணிச் சுட்டி நலந்தர.
ஏற்றுவார் கொடி - காளை வடிவம் எழுதப்பெற்ற நீண்ட கொடி,
ஆற்றுள் - சடையிலுள்ள கங்கையாற்றுள்,
தோற்றம் - அழகு,
ஞாற்றும் - தொங்கவிடப்பெற்ற,
நலந்தர - அழகு செய்ய.
எந்தையாம் இறைவனுடைய அழகு மிக்க சுடரை(மூன்றாம் கண்) உடைய நெற்றியில் தொங்க விடப்பட்ட ஒரு மணிச்சுட்டி அழகு செய்கிறது. இந்த
பிறையான நெற்றியின் அழகிற்குத் தோற்றுக் காளை வடிவம் எழுதப்பெற்ற நீண்ட கொடி கங்கையாற்றில் விழுந்து இறந்து போதற்கு எண்ணும்படியான அழகிய நெற்றி என்றாகும்.
Tuesday, June 17, 2008
பிரபுலிங்க லீலை - 2.18
Posted by ஞானவெட்டியான் at 9:02 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment