கூந்தலில் திருமாலை விளங்குதல்
2.17 இறைவன் அங்கண் எனுமுச் சுடர்களும்
உறவு கொண்ட இருளெனும் ஓதிமேல்
அறவ னென்றவவ் வண்ணல் புனைந்தருள்
நறவு மிழ்ந்த நறுமலர் தாழ்ந்திட.
முச்சுடர்களும் - ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளிப் பிழம்புகளும், இருள் எனும் ஓதி - இருளைப்போன்ற கூந்தல்,
அறவன் என்ற - அற வடிவினன் என்று கூறப்பெற்ற,
நறவு உமிழ்ந்த - தேனை வெளிப்படுத்திய,
தாழ்ந்திட - தொங்க,
அறவடிவினன் எனப்படும் இறைவன், இருளைப்போன்ற தன் கூந்தல்மேல் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளிப் பிழம்புகளையும் தேனை வெளிப்படுத்தும் மணமிக்க மலராகத் தொங்க விட்டுள்ளான்.
கூந்தலிலே இருள் தன்மையை யேற்றலும் மூச்சுடர் உறவைச் சேர்த்தலும் மிகையொற்றுமை யுருவக வணியாகும்.
( 2.17 ) இப்பாட்டு முதல் இருந்த ஆரருள் எம்பெருமாட்டிபால் என்னும் 2.26 (இருபத்தாறாவது) பாட்டுவரை குளகம்.
குளகம் பல பாட்டொருவினை கொள்ளும்.
Sunday, June 15, 2008
பிரபுலிங்க லீலை - 2.17
Posted by ஞானவெட்டியான் at 9:22 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment