இறைவனிடத்தில் இறைவி எழுந்தருளியிருத்தல்
2.16 இருந்த ஆதி யிடத்தில் இருந்தனள்
பரந்த வானும் படியும் உயிர்களும்
ஒருங்கு தோன்ற உதவிக் கருவுறீஇ
வருந்தி லாத மணிவயிற் றன்னையே.
இருந்த - எழுந்தருளியுருந்த (வேணியின் மேவுற ஆயிடை வாழ்வுற, திருநுதல். சேர்தர போன்றுற, தோடுற, ஒன்றுற, தயங்குற, பொற்புற, தாளுற),
ஆதி - கடவுள்,
படி - மண்ணுலகம்,
வான் - விண்ணுலகம்,
கருவுறீஇ - சூலுற்று,
மணி வயிறு - அழகிய வயிறு.
நீண்டு பரந்த வானுலகும், மண்ணுலகும், அதில் உள்ள அனைத்து உயிர்களும் ஒன்றாகத் தோன்ற உதவிசெய்து சூலுற்ற அழகிய வயிறுடன் இறைவனுடன் எழுந்தருளினாள் அம்மை.
2.10(குழவியாயுடல் என்னுஞ் செய்யுள்) முதல் 2.16(இச் செய்யுள்) வரையிலுங் குளகம்.
Saturday, June 14, 2008
பிரபுலிங்க லீலை - 2.16
Posted by ஞானவெட்டியான் at 8:55 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment