Saturday, June 14, 2008

பிரபுலிங்க லீலை - 2.16

இறைவனிடத்தில் இறைவி எழுந்தருளியிருத்தல்

2.16 இருந்த ஆதி யிடத்தில் இருந்தனள்
பரந்த வானும் படியும் உயிர்களும்
ஒருங்கு தோன்ற உதவிக் கருவுறீஇ
வருந்தி லாத மணிவயிற் றன்னையே.

இருந்த - எழுந்தருளியுருந்த (வேணியின் மேவுற ஆயிடை வாழ்வுற, திருநுதல். சேர்தர போன்றுற, தோடுற, ஒன்றுற, தயங்குற, பொற்புற, தாளுற),
ஆதி - கடவுள்,
படி - மண்ணுலகம்,
வான் - விண்ணுலகம்,
கருவுறீஇ - சூலுற்று,
மணி வயிறு - அழகிய வயிறு.

நீண்டு பரந்த வானுலகும், மண்ணுலகும், அதில் உள்ள அனைத்து உயிர்களும் ஒன்றாகத் தோன்ற உதவிசெய்து சூலுற்ற அழகிய வயிறுடன் இறைவனுடன் எழுந்தருளினாள் அம்மை.

2.10(குழவியாயுடல் என்னுஞ் செய்யுள்) முதல் 2.16(இச் செய்யுள்) வரையிலுங் குளகம்.

0 Comments: