தாள் வீரக்கழலின் தனிச்சிறப்பு
2.15 புரத்தை வென்ற நகைக்குமென் போதினோன்
சிரத்தை வென்றசெங் கைக்குஞ் சிலைமதன்
எரித்த கண்ணிற்கும் இன்றெனக் கூற்றடூஉத்
தரித்த வீரக் கழலொடு தாளுற.
புரத்தை - முப்புரங்களை,
போதினோன் - நான்முகன்,
சிரம் - தலை,
கூற்று அடூஉ - கூற்றுவனைக் கொன்று,
தரித்த - கட்டிய.
நகைக்கும், கைக்கும், நெற்றிக் கண்ணுக்கும் முப்புரங்களை வென்றும், நான்முகன் தலையைக் கொய்தும், காமனை யெரித்தும் ஒருபயனு மில்லையென்று சொல்லும்படி, கூற்றுவனைக் கொன்ற காலுக்கு மட்டும் வீரக்கழல் கிடைத்தது. இது தனிசிறப்பு என்க.
Thursday, June 12, 2008
பிரபுலிங்க லீலை - 2.15
Posted by ஞானவெட்டியான் at 10:28 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment