Sunday, June 08, 2008

பிரபுலிங்க லீலை - 2.14

பாம்புக்காப்பு, பன்றிக்கொம்பு புலித்தோல் அணிந்தமை

2.14 சொற்றெ ரிந்த சுடர்மணிக் கங்கணம்
உற்றி லங்க ஒருகருங் கேழலின்
பற்றி ருந்த மதாணியிற் பட்டெனப்
புற்ற ருங்கலை உற்றரை பொற்புற.

சொல் தெரிந்த - சொல் இலக்கணங்களையுணர்ந்த,
சுடர் - ஒளி,
கங்கணம் - காப்பு,
உற்று - பொருந்தி,
கேழல் - பன்றி,
பல் மதாணியில் திருந்த - தந்தமானது மார்புப் பதக்கத்தைப் போலத் திருத்தமாக அமையவும்,
புல்தரும் கலை - புலி கொடுத்த ஆடையாகிய தோல்,
அரை - இடுப்பு,
பொற்புற - அழகு செய்ய.

ஒளி பொருந்திய மணியைத் தலையில் சூடிய சொல் இலக்கணங்களையுணர்ந்த ஆதிசேடனாகிய நாகத்தைக் காப்பாக அணிந்து, கரும் பன்றியின் வெண்மைமிகு கோரைப்பல்லை(தந்தம்) தன் மார்புப் பதக்கமாகவும் அணிந்து, புலியின் தோலைத் தன் இடுப்பில் கச்சையாக அணிந்து(இடுப்பை அழகு செய்ய) சிவன் இருந்தான்.

சொற்றெரிந்த என்ற அடைமொழியால் ஆதிசேடன் ஆகிய பாம்புக் கங்கணம் என்பது தோன்றியது. மதாணியில் திருந்த எனவும், கலை அரையுற்றுப் பட்டெனப் பொற்புற எனவும் கூட்டுக.

1 Comment:

cheena (சீனா) said...

anbuLLa Ayya

Our Friend Mr.Bhuhari ( from Oraththanadu - Now in Canada ) wants to contact you urgently. Would you mind giving your address / cell number / land line number etc

Regards
cheena