Saturday, June 07, 2008

பஞ்சபட்சி சாற்றிறம் - 2

அகத்தியர் பஞ்சபட்சி சாற்றிறம்
**********************************

2. "துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்ய மலர்ப்பாதஞ் சேவித்தேன் - வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்."

பரிசுத்தமான வெண்தாமரையில் எழுந்தருளியிருக்கிற தோகைமயிலைப் போன்ற கலைவாணியே!
உன்னுடைய அழகிய பொன்போன்ற சிவந்த தாமரைமலர் போன்ற திருவடித்தாள் வணங்கினேன்.
ஆகையால், நீ இவ்வுலகில் இருக்கும் சகலசீவராசிகளையும் பட்சிகளாகப் பாவித்துப் பிரித்து, அதனதன் குணம் முதலியவைகளை விளக்கும் கலையை எம்மனத்தில் உணர்த்தி இருக்கச் செய்யவேண்டும்.

0 Comments: