சிவவாக்கியர்
***************
84.பருகியோடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகியோடி எங்குமா யோடும்சோதி தன்னுள்ளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே.
மூச்சுக் காற்றைப் பருகி, ஞானம் பழகி வரும்போது நம்முள்ளே பறந்துவந்த ஆகயவெளியில் நிலைத்து, நினைந்து கூர்ந்து நோக்கில் உன் மலங்களாகிய பாவங்கள் அழியும். உருகிய நெய்போல் எங்குமாய் ஓடிக் கலந்துள்ள சோதி தன்னுள்ளும் உள்ளது. அப்படியுள்ள அருட்பெரும் சோதிக்குள் கலக்கவேண்டும் எனக் கருதி உள்நோக்கிச் செல்வதே உங்களுக்கு நல்ல வழியாகும்.
Tuesday, January 01, 2008
84.பருகியோடி உம்முளே பறந்து
Posted by ஞானவெட்டியான் at 10:30 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment