Tuesday, January 01, 2008

85.சோதியாதி யாகிநின்ற சுத்தமும்

சிவவாக்கியர்
***************
85.சோதியாதி யாகிநின்ற சுத்தமும் பலித்துவந்து

போதியாத போதகத்தை வோதுகின்ற பூரணா
வீதியாக வோடிவந்து விண்ணடியி னூடுபோய்
ஆதிநாத னாதனென் றனந்தகால முள்ளதே.

அஞ்ஞான இருளை எரித்து சுத்த சுயம்புவாகிய, ஆதி சோதியாகிய பரிபூரணனே! யாரும் உபதேசிக்காத உபதேசத்தை(அறிவு) எப்பொழுதும் ஓதிக்கொண்டிருப்பவனே! என் உடலினுள்ளே ஓடிக்கொண்டுள்ள நாடிகளாம் வீதி வீதியாக அலைந்து ஓடிவந்து தலை என்னும் ஆகாயத்தில்(ஆ+காயம்) உள்ளே போய் ஆதி நாதனாகிய உன்னைக் காண இன்னும் கோடான கோடி காலம் உள்ளதே!

0 Comments: