சிவவாக்கியர்
**************
80.ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தி லழகிய
ஒருவராகி யிருவராகி யிளமைபெற்ற வூரிலே
அக்கணிந்து கொன்றைசூடு மம்பலத்தி லாடுவார்
அஞ்செழுத்தை யோதிடி னனேகபாவ மகலுமே.
அக்கு = உருத்திராக்கம்
அம்பலம் = தில்லையம்பலம், கோயில்
அஞ்செழுத்து - நமசிவய
இளமை = உன்மத்தம்
ஒன்றுபோல் செறிந்த இடத்தில் அழகிய உமையொடு சேர்ந்து ஒன்றாகி, உமையொருபாகனாக ஒருவராகவும், தனித்தனியாக அம்மையாகவும், அப்பனாகவும் உன்மத்தங்கொண்ட ஊரிலே(மனதிலே), உருத்திராக்கம் அணிந்து கொன்றைமலர் சூடிய பெருமான் மனக்கோவிலில் ஆடுகிறார். அவருக்குறிய "நமசிவய" என்னும் திருவைந்தெழுத்தை ஓதினால் பாவங்கள் அனைத்தும் அகலுமே!
Tuesday, January 01, 2008
80.ஒக்கவந்து மாதுடன் செறிந்திட
Posted by ஞானவெட்டியான் at 10:17 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment