Tuesday, January 01, 2008

80.ஒக்கவந்து மாதுடன் செறிந்திட

சிவவாக்கியர்
**************
80.ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தி லழகிய

ஒருவராகி யிருவராகி யிளமைபெற்ற வூரிலே

அக்கணிந்து கொன்றைசூடு மம்பலத்தி லாடுவார்

அஞ்செழுத்தை யோதிடி னனேகபாவ மகலுமே.


அக்கு = உருத்திராக்கம்
அம்பலம் = தில்லையம்பலம், கோயில்
அஞ்செழுத்து - நமசிவய
இளமை = உன்மத்தம்

ஒன்றுபோல் செறிந்த இடத்தில் அழகிய உமையொடு சேர்ந்து ஒன்றாகி, உமையொருபாகனாக ஒருவராகவும், தனித்தனியாக அம்மையாகவும், அப்பனாகவும் உன்மத்தங்கொண்ட ஊரிலே(மனதிலே), உருத்திராக்கம் அணிந்து கொன்றைமலர் சூடிய பெருமான் மனக்கோவிலில் ஆடுகிறார். அவருக்குறிய "நமசிவய" என்னும் திருவைந்தெழுத்தை ஓதினால் பாவங்கள் அனைத்தும் அகலுமே!

0 Comments: