சிவவாக்கியர்
**************
78.மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாய மென்னமாய மீசனே!
வீட்டில் உள்ள மட்பாண்டம் உடைந்தால், அது எதுக்காகிலும் பயன்படுமென மூலையில் வைப்பர். வெங்கலத்தினால் செய்த பாண்டம் உடைந்தால், உருக்கி வேறு செய்து கொள்ளலாம் என காத்து வைப்பார்கள். நங்கலனாகிய(நம்+கலன்) உடலிலிருந்து உயிர் பிரிந்தால் பிணம் நாறுமென தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆக, நம் உடலானது, மட்பாண்டம், வெண்கலப் பாண்டம் ஆகியவற்றின் மதிப்புக்கூட பெறாது. இவ்வாறு மதிப்பில்லா இவ்வுடலில் நீங்கள் உயிராய்க் கலந்து நின்ற மாயம் என்னவோ?
Tuesday, January 01, 2008
78.மண்கலங் கவிழ்ந்தபோது வைத்து
Posted by ஞானவெட்டியான் at 10:12 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment