சிவவாக்கியர்
***************
77.மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது ரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவ ரென்னதுன்ன தென்னவும்
கண்ணிலே மணியிருக்க கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரு மிதன்கணால் விழிப்பதே!
மண்ணிலே பிறந்து, மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ணற்ற கோடி தேவர்களுள் இவர் என்னவர், அவர் உன்னவர் என வழக்குகள் பல உரைத்து சண்டையிட்டு வீண்பொழுது போக்கும் மக்களே! நீங்கள் எல்லோரும் கண்ணிலே கருமணி இருக்கக் கண்தெரியாத குருடர்களே. அந்தக் கண்களின்மூலம் எண்ணற்ற கோடி தேவரும் தங்களின் கபாலத்திற்குள் சென்று உயிர்நாடியாம் பரிபூரணத்தை அறிந்துகொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் விழித்துக்கொண்டிருத்தல் அழகோ?
Tuesday, January 01, 2008
77.மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது
Posted by ஞானவெட்டியான் at 10:11 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment