சிவவாக்கியர்
***************
76.கருக்குழியி லாசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கு மேழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினாற் சிவந்த வஞ்செழுத்தையும்
உருக்கழிக்கு மும்மை யுமுணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
குருக்கு=இக்கிரி பிரமதண்டுச் செடி, வடலி முதலியன படர்ந்த தோப்பு
இடுக்கு = இடவெளி, சந்து
மேழி, மேழை = செம்மறி ஆடு
திரு = மேன்மை
திருத்தி=பூரணம்
செடிகள் படர்ந்துள்ள தோப்பின் சந்துக்குள் செம்மறி ஆடுகள்போல் அலைந்து திரியும் பாவிகளே! அந்த ஆடுகளைப்போல் யோனியாசைகொண்டு அதிலே அழிவு காணப்போகிறீர்கள். அழலைப்(தீ)போல சிவந்த அஞ்செழுத்தாலான மேன்மை பெற்ற இவ்வுடலால் பூரணமாக அவ்வஞ்செழுத்தையும் திருத்தமாக ஓதி உய்யும்(வாழும்) வழி காணுங்கள். இவ்வழி சென்று, உங்களின் உருவாகிய உடல் அழியுமுன்னமேயே மும்மையாகிய(மூன்றாயிருக்கும் தன்மை) மும்மலங்களையும் அறிந்து ஒதுக்கி, உங்களையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
Tuesday, January 01, 2008
76.கருக்குழியி லாசையாய்க் காதலுற்று
Posted by ஞானவெட்டியான் at 10:10 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment