Tuesday, January 01, 2008

75.இருவரங்க மும்பொருந்தி யென்புருகி

சிவவாக்கியர்
****************
75.இருவரங்க மும்பொருந்தி யென்புருகி நோக்கிலீர்

உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர்

கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்

திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!


இருவரங்கமாகிய சூரிய சந்திர கலைகளை ஒன்றுசேர்த்து, எலும்பு உருக தியானித்து, உள்ளே நுழையத் தெரியவில்லை. உடல் உருவே அரங்கமாகி அதனுள்ளே இருக்கும் உண்மையை(உள்+மெய்) ஆராய்ந்து அறிந்து தெளியமாட்டீர்கள். கருத்து உருவற்றது. அந்தக் கற்பனை அரங்கைக் கடந்து சென்று கருத்தாகிய முகுளமாம் திருமால் பள்ளிகொண்டுள்ள திருவரங்கமெனத் தெளிவு கொள்ளமாட்டேன் என்கிறீர்களே!

0 Comments: