சிவவாக்கியர்
**************
74.அறிவிலே பிறந்திருந் தாகமங்க ளோதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்
உறியிலே தயிரிருக்க வூர்புகுந்து வெண்ணைதேடும்
அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே.
நெறி=வழி
"அறிவுப் பிறப்பெடுத்துள்ளேன்" எனக் கூறி அறிவுபூர்வமாய்ச் சிந்தித்து ஆகமங்கள் அனைத்தையும் ஓதுகின்ற மனிதர்களே! அறிவுப் பிறப்பெடுத்தோர் செல்லும் வழி எது என அறிந்திடாது, மயங்கி, எது நேர்வழி என அறிகிலீர்.
நம் வீட்டு உறியிலேயே தயிர் இருக்க, ஊரிலுள்ள எல்லா வீடுகளிலும் சென்று வெண்ணையைத் தேடும் அறிவற்றவர்களாகிய உங்களுக்கு எப்படி விளக்குவேன்?
நம் உடலிலேயே தயிர் உள்ளது; அதைக் கடைந்தால் வெண்ணை கிடைத்துவிடும். கடையும் வழி என்ன? என்பதைக் காணுங்கள். இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடத்திலே தேடிப் பயனென்ன?
Tuesday, January 01, 2008
74.அறிவிலே பிறந்திருந் தாகமங்க
Posted by ஞானவெட்டியான் at 10:08 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஆம்.எல்லாமே நம்முள் மறைந்து தான் கிடக்கிறது.
அன்பு குமார்,
நன்றி.
Post a Comment